உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

விஷம் சாப்பிட்ட மாணவி சாவு

Published On 2022-06-02 15:25 IST   |   Update On 2022-06-02 15:25:00 IST
எலி பேஸ்ட் சாப்பிட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை:


ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் மையம் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன்.  மகள் மகாலட்சுமி (வயது 15). இவர் அப்பகுதியில் உள் ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், மாணவி சில நாட்களுக்கு முன்பு வயிற்று வலியால் துடிதுடித்தார்.  இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர்.

அப்போது  அங்கு  பரிசோதனை செய்த டாக்டர்கள்,  மாணவி எலிபேஸ்ட் (விஷம்) சாப்பிட்டுள்ளார் என தெரிவித்தனர். இதையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகு றித்து கீரமங்கலம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News