உள்ளூர் செய்திகள்
கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.

அங்காளபரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-06-02 15:22 IST   |   Update On 2022-06-02 15:22:00 IST
அங்காளபரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:

ஆலங்குடி அருேக உள்ள வடகாடு ஊராட்சிக்கு உட்பட்ட பூனைகுட்டிபட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பல லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இைதயொட்டி கோவில் வளாகத்தில் சிலதினங்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. இதனை தொடர்ந்து நேற்று காலை மேளதாளங்கள் வாணவேடிக்கைகள் முழங்க புனித நீரு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சிவாச்சாரியர்கள் வேதமந்திர முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து கோவிலில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. முன்னதாக விழாவில் பங்கேற்ற அமைச்சர் மெய்யநாதனுக்கு கிராமத்தினர் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். வடகாடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News