உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

வாலிபர் கொலை வழக்கு - 6 பேர் கைது

Published On 2022-06-02 09:46 GMT   |   Update On 2022-06-02 09:46 GMT
கும்பகோணத்தில் வாலிபர் கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம்:

கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் நடந்த தினேஷ் என்பவரின் கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை விரைந்து பிடிக்க எஸ்.பி ரவளிப்பிரியா உத்தரவின் பேரில் கும்பகோணம் உட்கோட்ட டி.எஸ்.பி அசோகன் மேற்பார்வையில் கிழக்கு இன்ஸ்பெக்டர் அழகேசன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி வாசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்்கள் ராஜா, செல்வகுமார், போலீசார் பாலு, நாடிமுத்து ,சுரேஷ், ஜனார்த்தனன், பார்த்திபன், ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் குற்றவாளிகளை தேடிவந்த னர். இந்நிலையில் இக்கொலை வழக்கில் தொடர்புடைய மணிகண்டன், கார்த்திக், விஜயகுமார்,சிபிராஜ், சந்தோஷ்குமார், தருண் பாலாஜி ஆகியோரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். 

கொலை செய்ய பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்களும் மற்றும் கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 
கொலை நடந்த 24 மணி நேரத்திற்குள்  கொலையாளிளை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது
Tags:    

Similar News