உள்ளூர் செய்திகள்
சேலத்தில் வாலிபர் திடீர் மாயமானார்.
சேலம்:
சேலம் கொண்டலாம்பட்டி என்.மேட்டுத்தெரு தடிக்காரன்காடு பகுதியை சேர்ந்தவர் கோபிசங்கர்(வயது30). மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 28-ந்தேதி ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
அக்கம்பக்கத்தில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி கோபிசங்கரின் தந்தை சிவகுமார் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிவு செய்து கோபிசங்கர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று விசாரித்து வருகிறார்கள்.
கோபிசங்கர் காணாமல் போன அன்று சந்தன கலர் கோடு போட்ட அரை கை சட்டையும், புளூ கலர் டிராயரும் அணிந்திருந்தார். அவரது இடது கண் பார்வை இல்லை. வலபுறமாக சாய்ந்து நடக்கும் பழக்கம் கொண்டவர். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.