உள்ளூர் செய்திகள்
நாகையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Published On 2022-06-01 14:18 IST   |   Update On 2022-06-01 14:18:00 IST
நாகையில் கொள்முதல் பணியில் உள்ள குளறுபடிகளை கைவிடக்கோரி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகப்பட்டினம்:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நாகப்பட்டினம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலைமேலாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது ஆர்ப்பா ட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மண்டல தலைவர் தமிழரசன் தலைமை வகி த்தார் சுமைப்பணி மாவட்ட செயலாளர் ஜெயராமன் நாகை மண்டல நிர்வாகி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நாகை மாலி எம்.எல்.ஏ, சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் தங்கமணி ஆகியோர் கண்டன உரையா ற்றினர். நாகை நுகர்பொருள் மண்டல மண்டல செயலாளர் கார்த்திகேயன், சி.ஐ.டி.யு மாவட்ட குழு குருசாமி, சி.ஐ.டி.யு சுமைப்பணி மாவட்ட தலைவர் தமிழரசன், டாஸ்மாக் சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் சிவக்குமார் ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதில் கொள்முதல் பணியில் உள்ள குளறு படிகளை கைவிட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது, 

தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி, சரண்டர் ஊதியம் வழங்க வேண்டும் டி.என்.டி*என் எஸ்.எஸ்.சி உள்ள அமுதம் ரேசன் கடைகளை கூட்டுறவு துறைக்கு மாற்ற கூடாது, சுமை தூக்கும் பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை சம்பளத்தைஉயர்த்தி வழங்கிட வேண்டும்உள்ளி ட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.  இறுதியாக உள்ளாட்சித் துறை மாவட்ட செயலாளர் அன்பழகன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News