உள்ளூர் செய்திகள்
குடிநீரை உறிஞ்சிய மின்மோட்டார்கள் பறிமுதல்
குடிநீரை உறிஞ்சிய மின்மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி பேரூராட்சியில் அனுமதியின்றி மின்மோட்டார்களை வவைத்து குடிநீர் உறிஞ்சிய 10 மின் மோட்டார்களை பேரூராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
ஆலங்குடி பேரூராட்சி 15-வது வார்டு பகுதியில் அனுமதியின்றி சிலர் மின்மோட்டார்களை வைத்து குடிநீறை உறிஞ்சி எடுப்பதாக கிடைத்த புகாரை தொடர்ந்து, பேரூராட்சி செயல் அலுவலர் பூவேந்திரன் தலைமையிலான அலுவலர்கள்
அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி பல ஆண்டுகளாக 10-க்கும் மேற்பட்டோர் மின்மோட்டாரை வைத்து குடிநீர் எடுத்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து மின்மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.