உள்ளூர் செய்திகள்
சாலையோரத்தில் பஸ் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

நாமகிரிப்பேட்டை அருகே தனியார் பஸ்-கார் மோதல்

Published On 2022-05-31 09:35 GMT   |   Update On 2022-05-31 09:35 GMT
நாமகிரிப்பேட்டை அருகே தனியார் பஸ்-கார் மோதல்; 4 பேர் காயமடைந்தனர்.
ராசிபுரம்:

ராசிபுரத்தில் இருந்து ஒரு கார் ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேபோல் ஆத்தூரிலிருந்து ராசிபுரத்தை நோக்கி தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. 

ஆயில்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே வந்தபோது பஸ்சை கார் முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக காரும் பஸ்சும் மோதிக்கொண்டன.

 பஸ் சாலையோரத்தில் உள்ள தண்ணீர் இல்லாத சிறிய கால்வாயில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 4 பேர் காயமடைந்தனர். 

சம்பவ இடத்திற்கு ஆயில்பட்டி போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு  சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். 
Tags:    

Similar News