உள்ளூர் செய்திகள்
தற்கொலை

கடலூர் அருகே திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

Published On 2022-05-29 12:13 GMT   |   Update On 2022-05-29 12:13 GMT
கடலூர் அருகே திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் அருகே நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடி சேர்ந்தவர் ஆனந்த குமார் (வயது 37). வெல்டிங் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் தனக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத நிலையில் மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.

சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த ஆனந்த குமார் மண்ணெண்ணையை திடீரென்று தன் மீது தானாக ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது அக்கம் பக்கத்தினர் தீயணைத்து ஆனந்த குமாரை மீட்டு கடலூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். ஆனால் ஆனந்தகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News