உள்ளூர் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் சிட்டுக்குருவிகள் கூண்டு அமைப்பு
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிட்டுக்குருவிகள் கூண்டை கலெக்டர் அருண் தம்புராஜ் அமைத்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் சிட்டுக்குருவிகளுக்கான கூண்டினை பொருத்தி ஸ்ரீஅறுபடை பசுமை சிறகுகள் அமைப்பினரை ஊக்கப்படுத்தினார். அறுபடை தர்ம சிந்தனை அறக்கட்டளையின் மற்ற செயல்பாடுகளையும் பொறுமையுடன் கேட்டு அறிந்து அதற்கான வாழ்த்துக்களை கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அலுவலக அதிகாரிகள் மற்றும் அறுபடை பசுமை சிறகுகள் அமைப்பை சேர்ந்த ராஜசரவணன், பண்டரிநாதன், கார்த்திக், ஜெகன், வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.