உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பாளை அருகே சிறுமி விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-05-29 15:26 IST   |   Update On 2022-05-29 15:26:00 IST
பாளை அருகே சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:

பாளை பர்கிட் மாநகரை அடுத்த நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் விநாயகம். கூலித்தொழிலாளி.

 இவரது மகள் சீதா (வயது 17). இவர் சம்பவத்தன்று விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார்.

 இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சீதா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பாளை தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News