உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

சாலை விபத்தில் வாலிபர் பலி

Published On 2022-05-29 14:21 IST   |   Update On 2022-05-29 14:21:00 IST
கறம்பக்குடி அருகே நடந்த சாலை விபத்தில் வாலிபர் பலியானார்.
புதுக்கோட்டை: 


புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பள்ளத்தான்மனை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவர் நேற்று இரவு கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டையில் உள்ள உறவினரைபார்க்க தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். 

பட்டுக்கோட்டை-கந்தர்வகோட்டை நெடுஞ்சாலையில் கறம்பக்குடி அருகே சொக்கன் தெரு என்ற இடத்தில் வந்த போது சாலையோரத்தில் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. 

இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேேய பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து தகவல் அறிந்ததும் கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்குவிரைந்து சென்று கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து கறம்பக்குடி போலீசார் வழக்கு பதிவு  விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News