உள்ளூர் செய்திகள்
விபத்து

பட்டதாரி வாலிபர் விபத்தில் பலி

Published On 2022-05-29 13:54 IST   |   Update On 2022-05-29 13:54:00 IST
பட்டதாரி வாலிபர் விபத்தில் பலியானார்.
திருமங்கலம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோட்டைப்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஹரிஷ்குமார் (வயது25), பட்டதாரி. இவர் நேற்று காலையில் சிம்கார்டு வாங்கி வருவதாக இருசக்கர வாகனத்தில் சென்றார். 

அவர் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள எம்.சுப்புலாபுரம் பகுதியில்  சென்றபோது  நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம்ட அடைந்தார். இதில் அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்து விட்டார்.

இதுபற்றி  டி.கல்லுப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில்    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஹரிஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இச்சம்பவம் குறித்து ஹரிஷ்குமாரின் தாய் கோவிந்தம்மாள் கொடுத்த புகாரின் பேரில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News