உள்ளூர் செய்திகள்
நியமனம்

வெளிநாடுகளில் பாதுகாப்பான பணி நியமனத்தை உறுதி செய்ய வேண்டும்

Published On 2022-05-29 08:11 GMT   |   Update On 2022-05-29 08:11 GMT
வெளிநாடுகளில் பாதுகாப்பான பணி நியமனத்தை உறுதி செய்ய வேண்டும் என ஏஜெண்டுகளுக்கு அறிவுறுத்தினர்.
மதுரை

வெளிநாடு வாழ் தமிழர் நலன் தொடர்பான புலம்பெயர்ந்தோர் நல பாதுகாப்பு அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்களின் சங்கங்கள் சென்னையில்  ஏற்பாடு செய்யப்பட்ட “பாதுகாப்பான இடம்பெயர்வு’’ என்ற தலைப்பில் மாநாடு நடந்தது.

இதில் பங்கேற்க புலம்பெயர்ந்தோர் நல பாதுகாப்பு இணைச் செயலாளர் பிரம்ம குமார்  சென்னை வந்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று     மதுரையில் உரிமம் பெற்ற ஆட்சேர்ப்பு முகவர்களால் நடத்தப்படும் திறன் மையங்களில் உள்ள வசதிகளையும் அவர் பார்வையிட்டார். 

சென்னை மற்றும் மதுரையில் நடந்த கலந்துரையாடலின்போது, அங்கீகரிக்கப்பட்ட முகவ ர்கள் மூலம் இந்தியர்கள் பாதுகாப்பான இடம் இடம்பெறுவதற்கான அவசியத்தை வலியுறுத்தினார். 

மேலும்  அரசுஅங்கீகாரம்  இல்லாமல் சட்ட விரோத மாக செயல்படும் முகவர்களை நம்பி வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று சிரம ப்படும் இளைஞர்களைப் பாதுகாப்பது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம், காவல்து றை   ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செய ல்பட வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற முகவர்களின் தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் www.emigrate.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கும்.  

இது தொடர்பான கூடுதல் தகவல் மற்றும் தொடர்புகளுக்கு புலம்பெயர்ந்தோர் நல பாதுகாப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 044-2852 , 5610/1337 மற்றும் மின்னஞ்சல் poechennai1@mea.gov.in . poechennai2@mea.gov.in ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என புலம்பெயர்ந்தோர் நல பாதுகாப்பு இணைச் செயலாளர் பிரம்ம குமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News