உள்ளூர் செய்திகள்
விபத்து

கடலூர் அருகே லாரி மோதி 3 வயது குழந்தை உள்பட 2 பேர் காயம்

Published On 2022-05-28 16:07 IST   |   Update On 2022-05-28 16:07:00 IST
கடலூர் அருகே லாரி மோதி 3 வயது குழந்தை உள்பட 2 பேர் படுகாயமடைந்தது தொடர்பாக ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் வன்னியர் பாளையம் சேர்ந்தவர் சுகாசினி (வயது 32). இவரும் இவரது தாயார் அறிவழகி (வயது 61), மகள் தியா (வயது 3) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் கடலூர் அருகே ரெட்டிச்சாவடி பெரிய காட்டுபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பின்னால் பால் ஏற்றி கொண்டு வந்த லாரி திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி அறிவழகி மற்றும் 3  வயது குழந்தை தியா ஆகியோர் கீழே விழுந்ததில் காயம் அடைந்தனர்.

இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News