உள்ளூர் செய்திகள்
ரெயில் பயணம்

மதுரை-தேனி ரெயிலில் முதல் நாளில் 634 பயணிகள் பயணம்

Published On 2022-05-28 06:12 GMT   |   Update On 2022-05-28 06:12 GMT
மதுரை-தேனி ரெயிலில் முதல் நாளில் 634 பயணிகள் பயணம் செய்ததால் ரூ. 25 ஆயிரத்து 751 கட்டணம் வசூல் ஆனது
மதுரை

மதுரை- தேனி இடையே முதன்முதலாக முன்பதிவற்ற பயணிகள் ரெயில் நேற்று முதல் இயக்கப்பட்டது.  மதுரையில் இருந்து வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனிக்கு முறையே 19, 31, 33, 273 பயணிகள் பயணி சீட்டு பெற்று பயணம் செய்தனர். இதன் மூலம் மதுரை கோட்டத்துக்கு கிடைத்த கட்டண வசூல் ரூ.14ஆயிரத்து 940 ஆகும்.

அடுத்தபடியாக வடபழஞ்சியில் இருந்து உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனிக்கு முறையே 7, 10, 27 பயணிகள் பயணம் செய்து உள்ளனர். இதன் மூலம் ரூ.1,590 கிடைத்துள்ளது. 
 
இேதபோல் உசிலம்பட்டியில் இருந்து தேனிக்கு 109 பயணிகள், ரூ.3,270 கட்டணம் செலுத்தி பயணம் செய்து உள்ளனர். ஆண்டிபட்டியில் இருந்து தேனிக்கு 65 பயணிகள் ரூ. 1,950 கட்டணம் செலுத்தி பயணம் செய்துள்ளனர். 

எனவே மதுரையில் இருந்து தேனிக்கு சென்ற முன்பதிவற்ற பயணிகள்ரெயிலில் மொத்தம் 574 பயணிகள் பயணம் செய்து உள்ளனர். இதன் மூலம் ரூ.21,750 கிடைத்துள்ளது.

இதேபோல் தேனியில் இருந்து மதுரைக்கு வந்த ரெயிலில் 377 பேர் பயணம் செய்தனர். ஆண்டிபட்டியில் இருந்து 213 பயணிகள் பயணம் செய்ததன் மூலம் ரூ.7,476, கிடைத்துள்ளது. உசிலம்பட்டியில் இருந்து 44 பயணிகள் மூலம் ரூ.1,320 கிடைத்து உள்ளது. 

மதுரை- தேனி இடையேயான பயணிகள் ரெயிலில் நேற்று மட்டும் ஓட்டுமொத்தமாக 634 பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் 
ரூ. 25,751 கட்டணம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News