உள்ளூர் செய்திகள்
கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1431ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயத்தில் கலெக்டர் கவிதா ராமு, பொ

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2022-05-27 08:49 GMT   |   Update On 2022-05-27 08:49 GMT
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் ஜமாபந்தி நடைபெற்றது. கறம்பக்குடி வட்டாட்சியரகத்தில் 1,431 ஆம் பசலி ஆண்டு (ஜமாபந்தி) வருவாய்த், தீர்வாயம் நிகழ்ச்சிக்கு கலெக்டர் கவிதா ராமு தலைமை வகித்து கணக்குகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும் போது:

 புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நடப்பாண்டுக்கான வருவாய் கிராமக் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. அதில் கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில், கறம்பக்கடி சரகத்திற்குட்பட்ட வருவாய்க் கிராமங்களுக்கான ஜமாபந்தி நிகழ்வில் கிராம கணக்குகள், பார்வையிட்ட ஆய்வு செய்யப்பட்டது.

இதில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 100க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் குடிமக்கள் பங்கு பெறும் குடிகள் மாநாடு நடைபெற்றது. இக்குடிகள் மாநாட்டில் மொத்தம் 46 பயனாளிகளுக்கு ரூ.133695 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன என்றார்.

Tags:    

Similar News