உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கோவையில் மனைவியின் கையை உடைத்து அறையில் சிறைவைத்த டிரைவர்

Published On 2022-05-27 13:47 IST   |   Update On 2022-05-27 13:47:00 IST
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கும் அன்னூரை சேர்ந்த பிரியங்கா என்பவருக்கும் திருமணம் நடந்தது.
கோவை:

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள மயில்கல்லை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் அப்புகுட்டி (வயது 33). டிரைவர். 
 
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கும் அன்னூரை சேர்ந்த பிரியங்கா (27) என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 7 பவுன் நகைகளை வரதட்சணையாக கொடுத்தனர். இந்தநிலையில் அப்புக்குட்டி, அவரது தாய் சரஸ்வதி, தந்தை துரைராஜ் ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு பிரியங்காவை கொடுமைப்படுத்தி வந்தனர். 
 
சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்த பிரியங்காவை தாக்கினர். இதில் அவரது வலது கை உடைந்தது. பின்னர் அறைக்குள் தள்ளி பூட்டினர். தாக்குதலில் படுகாயம் அடைந்த பிரியங்கா வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அவரை மீட்டனர். 
 
பின்னர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த தகவல் கிடைத்ததும் குனி யமுத்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு விசாரணை நடத்தினர். 

அவர் அளித்த புகாரின் போலீசார் வரதட்சணை கேட்டு மனைவியின் கையை உடைத்த அப்புக்குட்டி, அவரது தாய் சரஸ்வதி, தந்தை துரைராஜ் ஆகியோர் மீது ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், சிறைவைத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் அப்புக் குட்டி யை போலீசார் கைது செய்தனர்.அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சரஸ்வதி, துரைராஜ் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News