உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு- ஜெ.ராதாகிருஷ்ணன் கடிதம்

Published On 2022-05-27 07:47 GMT   |   Update On 2022-05-27 16:41 GMT
தமிழகத்தில் இதுவரை 93.74 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழ்நாட்டில் சமீப நாட்களாக கொரோனா மிகவும் குறைந்து வந்தது. நேற்றைய  கணக்கின்படி 59 பேருக்கு தினசரி கொரோனா தொற்று பதிவாகி இருந்தது. 

இந்நிலையில் தற்போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார். அவற்றை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் எழுதிய கடித்தத்தில், தமிழகத்தில் இதுவரை 93.74 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 82.55 சதவீதம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News