உள்ளூர் செய்திகள்
கோவையில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர்.

கோவையில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் 2-வது நாளாக ஆய்வு

Published On 2022-05-25 09:56 GMT   |   Update On 2022-05-25 09:56 GMT
24 மணி நேர குடிநீர் திட்டம், வெள்ளலூர் குப்பை கிடங்கு, ஒண்டிப்புதூரில் நடைபெற்று வரும் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கோவை:

தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் நேற்று கோவைக்கு வந்தனர். 

அவர்கள்  தலைவர் டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ., தலைமயில்  ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை, காய்கறி கழிவு மூலம் உரம் தயாரிக்கும் பணிகள், விதை பரிசோதனை நிலையம், ஜான் பாஸ்கோ சர்ச்சில் இருந்து ஜி.என். மில் சந்திப்பு வெள்ளக்கிணறு பிரிவு மேம்பாலம் கட்டும் பணி, பெரிய நாயக்கன் பாளையம் சந்திப்பு மேம்பாலம் கட்டும் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

இதனை தொடர்ந்து கொடிசியாவில் நடந்த அனைத்து துறை அலுவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் இன்று 2-வது நாளாக குழு தலைவர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் கோவையில் ஆய்வு மேற்கொண்டனர். குழுவினர் காலை 9 மணிக்கு உக்கடம் வாலாங்குளத்தை ஆய்வு செய்தனர். 

அதனை தொடர்ந்து ஜெய்ராம் நகரில் நடைபெற்று வரும் 24 மணி நேர குடிநீர் திட்டம், வெள்ளலூர் குப்பை கிடங்கு, ஒண்டிப்புதூரில் நடைபெற்று வரும் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 
 
இந்த ஆய்வின் மதிப்பீட்டு குழு உறுப்பினர்களும், எம்.எல்.ஏ.க்களுமான அன்பழகன், ஈஸ்வரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், எழிலரசன்,  பாலசுப்பிரமணியன், ராஜ்குமார், அம்மன் அர்ச்சுணன்,  சதன் திருமலைகுமார், சிவக்குமார் என்கிற தாயகம் கவி , மாவட்ட கலெக்டர் சமீரன், சட்டமன்ற பேரவை கூடுதல் செயலாளர் சுப்பிரமணியம், மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச் செல்வன், மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா மற்றும் பலர் உடன் இருந்தனர். 
Tags:    

Similar News