உள்ளூர் செய்திகள்
ரேஷன் அரிசி பறிமுதல் செய்தவரை கைது செய்தனர்.
மதுரை
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திருமங்கலம் நகர் போலீசார் குறிப்பிட்ட இடத்தில் சோதனை மேற்கொண்ட போது தலைமைறைவான பகுதியில் பதுக்கி வைத்திருந்த 24 மூடை(1200 கிலோ) பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் மதுரை காமராஜ புரம் பகுதியை சேர்ந்த வீரபத்திரன் (வயது33) என்பவர் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி அதிக விலைக்கு விற்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து திருமங்கலம் நகர் போலீசார் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரியிடம் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வீரபத்திரனை கைது செய்தனர்.