உள்ளூர் செய்திகள்
மோசடி

எல்.ஐ.சி. முகவரிடம் ரூ. 1 லட்சம் மோசடி

Published On 2022-05-24 12:21 GMT   |   Update On 2022-05-24 12:21 GMT
10 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக கூறி எல்.ஐ.சி. முகவரிடம் 1 லட்சம் மோசடி செய்த கும்பலை பற்றி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்

பரமக்குடி அருகே  உள்ள என்.வள்ளியனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கரிசாமி (வயது 34). இவர் 10ம் வகுப்பு படித்துவிட்டு பரமக்குடியில்எ ல். ஐ.சி. முகவராக பணியாற்றி வருகிறார். 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு டி.வி.யில் வந்த ஆன்லைன் நிறுவனத்தின் விளம்பரத்தினை பார்த்த கரிசாமி அதில் காலணி மற்றும் வாட்ச் பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த  16-ந்தேதி பிரபல நிறுவனத்தின் பேரில் கரிசாமிக்கு ஒரு தபால் வந்தது. அதில் இருந்த பரிசு கூப்பனை பிரித்து பார்த்தபோது, அதில் 9 லட்சத்து 50 ஆயிரம் பரிசு விழுந்திருப்பதாகவும்,  அந்த பரிசு தொகையை பெற   விபரங்களை அனுப்புமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.  அதன்படி அவர் தனத வங்கி எண் விவரங்களை குறிப்பிட்ட செல்வேபோன் எண்ணுக்கு அனுப்பினார்.

கடந்த 19-ந் தேதி கரிசாமியி டம் பேசிய மர்ம நபர் பரிசுத்தொகையை பெற குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டுமென கூறியிருந்தார். இதனை நம்பி ரூ. 97 ஆயிரத்து 700 யை மோசடி கும்பல் கொடுத்த வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார்.

பணத்தை பெற்றுக் கொண்ட பின் அந்த கும்பல் தொடர்பை துண்டித்துக் கொண்டது. தன் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கரிசாமி இது குறித்து  ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News