உள்ளூர் செய்திகள்
மயிலாடுதுறையில் சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தரங்கம்பாடி:
தஞ்சை நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் வட்டத்தின் கண்காணிப்பு என்ஜினீயர் சீனிவாசராகவன் தலைமையிலான என்ஜினீயர்கள் குழுவினர் மயிலாடுதுறையில் அமைக்கப்பட்டு வரும் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட சாலைப்பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
மயிலாடுதுறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில், மயிலாடுதுறை-திருத்துறைப்பூண்டி சாலையில் பட்டமங்கலம் அருகே சுமார் 2 கி.மீ. நீளத்திற்கு இரு வழித்தடத்தில் இருந்து பலவழித்தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யப்பட்ட பணிகளின் தரம் மற்றும் கட்டுமானம் குறித்து என்ஜினீயர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
சாலையின் நீளம், அகலம், கட்டுமானத்தின் தரம் மற்றும் உறுதித்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.