உள்ளூர் செய்திகள்
மின்வாரிய என்ஜினீயர் வீட்டில் நகை- பணம் கொள்ளை
மின்வாரிய என்ஜினீயர் வீட்டில் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
மதுரை
மதுரை நாகமலை புதுக்கோட்டை, பாரதியார் நகரைச் சேர்ந்தவர் சந்திரபாண்டி (வயது 42). இவர் சமயநல்லூரில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் சந்திரபாண்டி சம்பவத்தன்று காலை மாமனார் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். எனவே அவரது தாயார் வீட்டை பூட்டிவிட்டு ரூமில் படுத்து தூங்கினார்.
அப்போது யாரோ மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 6 பவுன் தங்க சங்கிலி மற்றும் 85 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளை அடித்து தப்பிச்சென்றனர்.
இதுதொடர்பாக சந்திரபாண்டி நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.