உள்ளூர் செய்திகள்
கைது

நகை பறித்தவர் கைது

Published On 2022-05-23 08:43 GMT   |   Update On 2022-05-23 09:45 GMT
வாலிபரிடம் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை கரிமேடு, மோதிலால் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரபாகரன் (33). சம்பவத்தன்று இவர் இரவு திலகர் திடல், நாயக்கர் புது தெருவில் நடந்து சென்றார்.   அங்கு வந்த ஒரு வாலிபர்   கத்தியை காட்டி மிரட்டி ரூ.3,420-ஐ  பறித்து தப்பினார். 

இது குறித்த புகாரின் பேரில் திலகர் திடல்   போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை பிடித்து  விசாரணை நடத்தினர். அவர் கரிமேடு, ராஜேந்திரா மெயின் ரோடு, தக்காளி ராஜ்குமார் (35) என்பது தெரியவந்தது. அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். 

இதனைத் தொடர்ந்து  அவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை ஆனையூர், மல்லிகை நகர், ரேக்ளான் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவர் நேற்று இரவு செல்லூர் கே.வி. சாலையில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், கணேசனிடம் 1 பவுன் தங்க சங்கிலி மற்றும் செல்போனை  பறித்துக் கொண்டு தப்பினர்.

இது குறித்த புகாரின் பேரில்,  செல்லூர்   போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News