உள்ளூர் செய்திகள்
பழனி அருகே பைனான்சியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
பழனி அருகே பைனான்சியர் வீட்டில் இன்று நகை, பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பழனி:
இன்று காலை அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பொன்ராமுக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து பொன்ராம் வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.50,000 பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் பழனி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி டி.எஸ்.பி. சத்யராஜ், இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.