உள்ளூர் செய்திகள்
கொள்ளை நடந்த வீட்டில் போலீசர் விசாரணை நடத்தினர்.

பழனி அருகே பைனான்சியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

Published On 2022-05-23 08:24 GMT   |   Update On 2022-05-23 08:24 GMT
பழனி அருகே பைனான்சியர் வீட்டில் இன்று நகை, பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பழனி:

பழனி டவுன் குபேரபட்டினத்தைச் சேர்ந்தவர் பொன்ராம். பைனான்சியர்.  இவர் நேற்று இரவு குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இன்று காலை அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.  இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பொன்ராமுக்கு  தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து பொன்ராம் வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில்  இருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.50,000 பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து அவர் பழனி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி டி.எஸ்.பி. சத்யராஜ், இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா மூலம் முதல்கட்ட விசாரணை துவக்கப்பட்டுள்ளது. பழனி பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பதால் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News