உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கோவையில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

Published On 2022-05-20 16:42 IST   |   Update On 2022-05-20 16:42:00 IST
தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து வருகிறது. பிரதிக்ஷா 2 தேர்வுகளை எழுதி இருந்தார்.
கோவை:
 
கோவை வடவள்ளி பழனி கவுண்டன் புதூர் அருகே உள்ள பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பரமசிவம். போட்டோகிராபர்.
 
சொந்தமாக ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். இவரது மகள் பிரதிக்ஷா(வயது16). இவர் வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து வருகிறது.  பிரதிக்ஷா 2 தேர்வுகளை எழுதி இருந்தார்.
 
இந்த நிலையில் நேற்று மாலை பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய அவர் அறையில் திடீரென தூக்குபோட்டு தொங்கினார்.
 
இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தூக்கு கயிற்றில் இருந்து பிரதிக் சாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
 
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேர்வு கடினமாக இருந்ததால் பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 10-ம் வகுப்பு மாணவி திடீர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News