உள்ளூர் செய்திகள்
திண்டிவனம் அருகே வயிற்றுவலி தீராததால் மன உளைச்சலில் வாலிபர் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வயிற்றுவலி தீராததால் மன உளைச்சல் அடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே முன்னூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 29) கூலி தொழிலாளி. இவருக்கு பல நாட்களாக வயிற்று வலி இருந்து அவதிப்பட்டு வந்ததாக தகவல் கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு ஸ்டாலின் வயிற்று வலி தீராததால் மன உளைச்சலில் இருந்தார். வீட்டில் எல்லோரும் வெளியே இருந்த சமயத்தில் ஸ்டாலின் தன் அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் உள்ளவர்கள் இதுகுறித்து பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம் அருகே முன்னூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 29) கூலி தொழிலாளி. இவருக்கு பல நாட்களாக வயிற்று வலி இருந்து அவதிப்பட்டு வந்ததாக தகவல் கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு ஸ்டாலின் வயிற்று வலி தீராததால் மன உளைச்சலில் இருந்தார். வீட்டில் எல்லோரும் வெளியே இருந்த சமயத்தில் ஸ்டாலின் தன் அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் உள்ளவர்கள் இதுகுறித்து பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.