உள்ளூர் செய்திகள்
தூய்மை பணி

மாவட்ட ஊராட்சிக்குழு தலைவருக்கு பாராட்டு

Published On 2022-05-20 10:21 GMT   |   Update On 2022-05-20 10:21 GMT
தூய்மை குறித்து விழிப்புணர்வு செய்த மாவட்ட ஊராட்சிக்குழு தலைவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ் புதூர் ஒன்றியம் அருகே உள்ள பொன்னடபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்மணி பாஸ்கரன் ஆவார்.

இவர் சிவகங்கை மாவட்ட ஊராட்சி குழு தலைவராக இருந்து வரும் நிலையில் தூய்மை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தான் பங்கேற்ற கோவில் திருவிழாவில் மக்கள் உணவருந்திவிட்டு சென்ற தட்டுகள் மற்றும் ஏனைய பொருட்களை தானே முன்னின்று அப்புறப்படுத்துத்தினார். 

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வரும் நிலையில் வாழ்வில் தனிமனிதர் ஒவ்வொருவரும் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் பொன்மணி பாஸ்கரன் செய்த இச்செயலை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
Tags:    

Similar News