உள்ளூர் செய்திகள்
பூமி பூஜை நடந்த காட்சி.

ஓசூர் கே.சி.சி.நகரில் ரூ.25 லட்சத்தில் பாலம் கட்டும்பணிக்கு பூமி பூஜை

Published On 2022-05-20 15:31 IST   |   Update On 2022-05-20 15:31:00 IST
ஓசூர் கே.சி.சி.நகரில் ரூ.25 லட்சத்தில் பாலம் கட்டும்பணிக்கு பூமி பூஜை செய்யப்பட்டது.
ஓசூர்,

ஓசூர் மாநகராட்சி 6-வது வார்டுக்குப்பட்ட கே.சி.சி.நகர் நுழைவுவாயிலில்,15 -வது நிதிக் குழு திட்டத்தின் கீழ் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறிய பாலம் புதிதாக அமைக்கப்படவுள்ளது.

இதையொட்டி நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தனர்.

 மேலும் இதில், மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி பொறியாளர்கள் ராஜேந்திரன், பிரபாகர், சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன், மண்டல தலைவர் அரசனட்டி ரவி, மாநகராட்சி கவுன்சிலர்கள் சென்னீரப்பா, எம்.கே.வெங்கடேஷ், மம்தா, தொமு.ச. கவுன்சில் மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Similar News