உள்ளூர் செய்திகள்
.

ஓசூர் பஸ்நிலையத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தவர் கைது

Published On 2022-05-20 10:00 GMT   |   Update On 2022-05-20 10:00 GMT
ஓசூர் பஸ்நிலையத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
 ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் போலீசார் ஓசூர் பஸ்நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 
அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த ஒருவரை  போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த பிளவேந்திரன் (வயது41) என்பதும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை  போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News