உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரியில் கடல் “திடீர்” என்று உள்வாங்கியது
கடல் “திடீர்” என்று உள்வாங்கியதால் கன்னியாகுமரியில் மணல் பரப்பாக காட்சி அளித்த முக்கடல் சங்கமம் கடற்கரை - பாறைகளும் வெளியே தெரிந்தன
கன்னியாகுமரி:
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி ஏற்பட்ட சுனாமி என்னும் ஆழிப்பேரலைக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற முக்கியமான நாட்களில் கன்னியாகுமரி கடலில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.
கடல் சீற்றம், கடல் கொந்த ளிப்பு, கடல் உள்வாங்குவது, கடல் நீர் மட்டம் தாழ்வது, கடல் நீர் மட்டம் உயர்வது, கடல் நிறம் மாறுவது, கடல் அலையே இல்லாமல் அமைதியாக குளம் போல் காட்சி அளிப்பது, போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் பவுர்ணமி, அமாவாசை அல்லாதமற்ற நாட்களிலும் கன்னியாகுமரி கடலில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.
அந்த அடிப்படையில் கன்னியாகுமரியில் இன்று காலையிலும் கடல் திடீர் என்று உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி இருந்தது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன.
குறிப்பாக கன்னியாகுமரியில் முக்கடலும் சங்க மிக்கும் திரிவேணி சங்க மம் சங்கிலித்துறை கடற்கரை பகுதி மணல் பரப்பாக காட்சியளித்தது. இதைக்கண்டு இன்று அதிகாலை சூரியன் உதயமாகும் காட்சியை காண கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர். ஆனால் மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு கரைக்கு திரும்பினர்.
நீர் மட்டம் தாழ்ந்து கடல் உள்வாங்கி காணப்பட்டதால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து இதுவரை தொடங்கப்படவில்லை.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளு வர் சிலையை படகில் சென்று பார்ப்பதற்காக இன்று அதிகாலையிலிருந்தே பூம்புகார் கப்பல் போக்கு வரத்துக் கழக படகுத்து றையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் 3 மணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.