உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே வரதட்சணை கேட்டு மனைவிக்கு தொந்தரவு
கிருஷ்ணகிரி அருகே வரதட்சணை கேட்டு தொந்தரவு கொடுத்த கணவர் மீது மனைவிக்கு மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம். பாலங்கப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கும் மாலாஸ்ரீ என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் ரூ.1லட்சம் வரதட்சணை கேட்டு சந்தோஷ் அடிக்கடி மனைவியிடம் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து மாலாஸ்ரீ போலீசில் புகார் செய்துள்ளார். இதனால் கடந்த சிலமாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் ராம்நகர் பகுதியை சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணை சந்தோஷ் இரண்டாவதாக திருமணம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஆனாலும் அவர் மீண்டும் மீண்டும் மாலாஸ்ரீக்கு தொந்தரவு கொடுத்து வருவதாக கூறப்படு கிறது. இது குறித்து மாலாஸ்ரீ கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்து ள்ளார். அந்த புகாரின் பேரி ல்சப்- இன்ஸ்பெ க்டர் நாகமணி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.