உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி கோவில் விழாவில் பூக்கூடை சுமந்து பெண்கள் ஊர்வலம்
கிருஷ்ணகிரி கோவில் விழாவில்பூக்கூடை சுமந்து பெண்கள் ஊர்வலம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பழையபேட்டை திருநீலகண்டர் தெருவில், கொரட்டி ஸ்ரீ காளத்தீஸ்வரர் அருள் பெற்ற வைலாம்முடையார் மகரிஷி கோத்ரம் குலாலர் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து சிவகாமியம்மன் கோவில் திருவிழாவை நடத்தினார்கள்.
திருவிழாவையொட்டி நேற்று காலை திருநீலகண்டர் தெருவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் மேள தாளங்கள் முழங்க அம்மனுக்கு பூக்கூடையை சுமந்து ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் நேதாஜிசாலையில் உள்ள சிவகாமியம்மன் 21 அடி திருஉருவ சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதனையடுத்து அனைவருக்கும் மதிய விருந்து வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் ஏராளமானார் கலந்துகொண்டனர்.