உள்ளூர் செய்திகள்
ஓசூரில், கனமழையால் வீடுகளில் மழைநீர் புகுந்தது
ஓசூரில், கனமழையால் வீடுகளில் மழைநீர் புகுந்தது.
ஓசூர்,
ஓசூரில் பெய்துவரும் கனமழையால், நகரின் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வீடுகளில் புகுந்து விட்டது.
இதையடுத்து, இரவோடு இரவாக, மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் மழை நீர் வெளியேற்றப்பட்டது.
மேலும், மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா, நேற்று ராஜாஜிநகர் ராயக்கோட்டை ரோடு,காமராஜர் காலனி, ராஜ கணபதி நகர்,ஹவுசிங் போர்டு மற்றும் பல பகுதிக்கு நேரடியாகச் சென்று மக்களை சந்தித்து ஆய்வு செய்து துரித நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டார். அப்போது பகுதி கவுன்சிலர்கள் மற்றும் கட்சியின் உடன் இருந்தனர்.