உள்ளூர் செய்திகள்
ஓசூரில் ஊராட்சி தலைவர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
ஊராட்சி தலைவர் மாதேஷ்க்கு அனைவரும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
ஓசூர்,
ஓசூர் ஒன்றியத்தி ற்குட்பட்ட ஊராட்சி தலைவர்கள் சங்க கூட்டம், ஓசூர் அருகே நல்லூரில் உள்ள ஒரு கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்ட த்தில், நாகொண்டபள்ளி லட்சுமய்யா, பாகலூர் வி.டி.ஜெயராமன், கொத்தகொண்டபள்ளி சுமா முனிராஜ், தொரப்பள்ளி ராமமூர்த்தி, நல்லூர் வீரபத்திரப்பா உள்ளிட்ட 18 ஊராட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், சங்கத்தின் புதிய தலைவராக, ஒன்னல்வாடி ஊராட்சி தலைவர் வி.மாதேஷ், ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து, புதிய தலைவருக்கு அனைவரும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், சங்கத்தின் செயலாளராக, நாகொண்டபள்ளி லட்சுமய்யா, துணை செயலாளராக ஷோபா ராணி (தும்மன பள்ளி ஊராட்சி), பொருளா ளராக பத்மாவதி சந்திர சேகர்(ஈச்சங்கூர் ஊராட்சி) ஆகியோர் தொடர்ந்து நீடிப்பார்கள் என்றும், துணைத்தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.