உள்ளூர் செய்திகள்
மாயம்

பள்ளி மாணவிகள்-இளம்பெண்கள் மாயம்

Published On 2022-05-18 12:25 GMT   |   Update On 2022-05-18 12:25 GMT
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மாணவிகள்-இளம்பெண்கள் மாயமானார்கள்.
விருதுநகர்

அருப்புக்கோட்டை பாலையம்பட்டி இந்திராநகரைச் சேர்ந்தவர் செண்பகவள்ளி. இவரது மகள் பிளஸ்-1 படித்து வருகிறார். 

சம்பவத்தன்று தட்டச்சு பயிற்சிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை.  இதுகுறித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

விருதுநகர் கல்போது கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா கனி. பட்டாசு தொழிலாளி. இவருக்கு 6 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இதில் பிளஸ்-2 படிக்கும் ஒரு மகள் சம்பவத்தன்று திடீரென மாயமானார். பல இடங்களில் தேடி யும் கண்டுபிடிக்க முடிய வில்லை. வச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 

காரியாபட்டி, கல்குறிச்சி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் ராஜாங்கம். இவரது மகள் ஈரோட்டில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார். சில வாரங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்த இவர் சம்பவத்தன்று வெளியே செல்வதாக கூறிவிட்டுச் சென்றார். ஆனால் பின்னர் வீடு திரும்பவில்லை.  இதுகுறித்து மல்லாங்கிணறு போலீசார் விசாரித்து வருகின்றனர். 

சிவகாசி அண்ணா காலனியைச் சேர்ந்தவர் ஷாஜாத்தி பேகம். இவரது மகள்  மணிகண்டன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை உள்ளது. 

இந்த நிலையில் மணிகண்டன் மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதன் காரணமாக குழந்தைகளுடன் அந்தபெண் தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். வேலைக்கு சென்று வந்த அவர் திடீரென 3 குழந்தைளுடன் மாயமானார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News