உள்ளூர் செய்திகள்
கோவில்பாளையம் பகுதியில் தரைபாலம் மூழ்கியது.

மொடக்குறிச்சி பகுதியில் தரைபாலம் மூழ்கியது

Published On 2022-05-18 15:37 IST   |   Update On 2022-05-18 15:37:00 IST
மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குலவிளக்கு கிராமம் கோவில்பாளையத்தில் நேற்று பெய்த கனமழையால் குரங்கன் ஓடை தரைப்பாலம் மூழ்கியது.
மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குலவிளக்கு கிராமம் கோவில்பாளையத்தில் நேற்று பெய்த கனமழையால் குரங்கன் ஓடை தரைப்பாலம் மூழ்கியது.

முகாசி அனுமன் பள்ளியில் தொடங்கி அவல்பூந்துறை எழுமாத்தூர், பாண்டிபாளையம், கோவில்பாளையம் வழியாக ஊஞ்சலூர் அருகே காவிரியில் கலக்கும் குரங்கன் ஓடை கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீர் ஓடையாக உள்ளது. கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையின் காரணமாக ஓடையில் நீர்வரத்து இருந்து வந்தது. நேற்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை விடாமல் மழை பெய்தது.

இதனால் குரங்கு ஓடையில் நீர்வரத்து அதிகரித்தது. கோவில் பாளையம் என்ற இடத்தில் தரைப்பாலம் நீரில் மூழ்கி முழங்கால் அளவு தண்ணீர் பாலத்திற்கு மேல் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் பாலத்தை கடந்து சென்று செல்கின்றனர்.

Similar News