உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

டெங்கு விழிப்புணர்வு பேரணி

Published On 2022-05-18 09:25 GMT   |   Update On 2022-05-18 09:25 GMT
தலைஞாயிறில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக டெங்கு தடுப்பு தினத்தை முன்னிட்டு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தலைஞாயிறு  ஒன்றியகுழுத்தலைவர் தமிழரசி  தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். முன்னதாக வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளையராஜா வரவேற்றார். 

தலைஞாயிறு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  தொடங்கிய பேரணி மேலத்தெரு, அக்ரஹாரம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையத்தை வந்தடைந்தது.விழிப்புணர்வு பேரணியில் பொதுமக்களுக்கும் வணிக வளாக நிறுவனங்களுக்கும் டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். 

முடிவில் சுகாதார ஆய்வாளர் பட்டாபிராமன் நன்றி தெரிவித்தார்.
Tags:    

Similar News