உள்ளூர் செய்திகள்
சாத்தூரில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்
சிவகாசி இந்திரா நகரை சேர்ந்த பாபு (வயது 49) பெயிண்டர். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவர் பிரிந்து சென்றுவிட்டதால் பாபு 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவரது மகள் ஷர்மிளா (20) இவர் கடந்த 18 மாதங்களுக்கு முன்பு திவான் பாட்சா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஒரு மாதத்திலேயே காதல் கசந்துவிட்டதால் 2-வதாக அதே பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் என்பருடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தார்.
அவருடன் கருத்து வேறு பாடு ஏற்பட்டதால் அவரைப் பிரிந்து 8 மாதங்களுக்கு முன்பு தனது தந்தை வீட்டுக்கு வந்துவிட்டார்.பின்னர் மேட்ட மலையைச் சேர்ந்த கார்த்திக் ராமையா என்பவருடன் சாத்தூர் வெங்கடாசலபுரத்தில் குடும்பம் நடத்தி வந்தார்.அவருடனும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்ட தால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஷர்மிளா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.