உள்ளூர் செய்திகள்
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-05-17 12:43 GMT   |   Update On 2022-05-17 12:43 GMT
சிவகங்ைகயில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிவகங்கை

சிவகங்கை ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்துணவு ஊழியர்களை தரக்குறைவாக ஒருமையில் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலரின் விரோதப் போக்கினை கண்டித்தும், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை கண்டித்தும் சத்துணவு ஊழியர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். 

ஒன்றிய செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் ஆணையாளராகப் பணிபுரிபவர் தொடர்ச்சியாக, ஊழியர் விரோதப்போக்குடன் செயல்படுகிறார். 

ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய நியாயமான கோரிக்கைகளை மறுத்தும், ஒருமையில் பேசியும், அவமானப்படுத்தி வரும் ஆணையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத்தின் சார்பில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
Tags:    

Similar News