உள்ளூர் செய்திகள்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஆய்வு செய்தார்.

பாகாயத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் கலெக்டர் திடீர் ஆய்வு

Published On 2022-05-14 10:46 GMT   |   Update On 2022-05-14 10:46 GMT
பாகாயத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்து பொருட்கள் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.
வேலூர்:

வேலூர் பாகாயத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் வேலூர் மாவட்ட குமாரவேல் பாண்டியன் இன்று திடீரென ஆய்வு செய்தார்.

அப்போது அலுவலகத்தில் இருந்த மண்டல மேலாளர் ராஜா துணை மண்டல மேலாளர் விஜயகுமார் ஆகியோரிடம் அரிசி, பருப்பு, கோதுமை தரம் குறித்து ஆய்வு செய்து இருப்பு குறித்து கேட்டறிந்தார். 

அப்போது அரிசி 2,517 டன், கோதுமை 729 டன், சர்க்கரை 260 டன், துவரம்பருப்பு 38 டன், பாமாயில் 20ஆயிரம் பாக்கெட்டுகள் இருப்பு உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் ரேசன் கடைகளில் வினியோகிக்க அனுப்பி வைக்கப்பட்ட தரம் குறைந்த 26 டன் ரேசன் அரிசி திரும்ப பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 

நுகர்பொருள் வாணிப கிடங்கில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் தங்களுக்கு ஓய்வு அறை மற்றும் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி போன்றவை ஏற்படுத்தி தர வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.

தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் ஒரு வார காலத்திற்குள் சாலையை சீரமைத்து தர வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது உதவி கலெக்டர் பூங்கொடி, மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ், தாசில்தார் செந்தில் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News