உள்ளூர் செய்திகள்
கும்பாபிஷேகம் நடைபெற்ற காட்சி.

சிவசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-05-13 09:51 GMT   |   Update On 2022-05-13 09:51 GMT
அரியாங்குப்பம் அருகே சிவசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
புதுச்சேரி:

அரியாங்குப்பம் அடுத்த தமிழக பகுதியான கிழிஞ்சிக்குப்பம் அருகே அங்காளங்குப்பம் கிராமத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

 காலை 9 மணியளவில் விநாயகர், சுப்பிரமணிய சுவாமிகள் விமான கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. 

இந்த கும்பாபிஷேக விழாவில் கடலூர் தொகுதி எம்.எல்.ஏ. அய்யப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.  இதற்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாமை தனசேகர், கவுரவ தலைவர் ஜீவா என்கிற சிவா, தர்மகர்த்தா செந்தில், ஊர் பஞ்சாயத்து தலைவர் மருது மற்றும் அங்காளங்குப்பம் குப்பம் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News