உள்ளூர் செய்திகள்
கறம்பக்குடியில் முத்துகருப்பையாசாமி கோவிலில் சித்திரை திருவிழா
கறம்பக்குடியில் முத்துகருப்பையாசாமி கோவிலில் சித்திரை திருவிழா நடை பெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் உள்ள அருள்மிகு முத்துகருப்பையா சாமி கோவில் திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.
அதே மாதிரி இந்த ஆண்டும் நடைபெற்றது. திருவிழாவை பாடை காவடி, பறவை காவடி, செடில் காவடி, கரும்பால் தொட்டில்கட்டி காவடி எடுத்து பக்தர்கள் சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முத்துக்கருப்பையா சாமிக்கு பால், இளநீர் உள்பட எல்லாவிதமான அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
விழா முன்னிட்டு கரகாட்டம், வானவேடிக்கை, வள்ளி திருமண நாடகம் நடைபெற்றது. இதற்கானஏற்பாடுகளை பரம்பரை மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.