உள்ளூர் செய்திகள்
எந்திரம் மூலம் நெல் அறுவடை பணிகள் நடைபெறும் காட்சி.

நெல் அறுவடை பணிகள் தீவிரம்

Published On 2022-05-12 15:15 IST   |   Update On 2022-05-12 15:15:00 IST
வத்திராயிருப்பு பகுதியில் எந்திரத்தின் மூலம் நெல் அறுவடை பணிகள் தீவிரமாகமாக நடைபெற்று வருகின்றன.
வத்திராயிருப்பு

வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட வத்திராயிருப்பு, கூமாபட்டி, கான்சாபுரம், மகாராஜபுரம், சுந்தரபாண்டியம் மற்றும் அதன் சுற்றுவட்டார  பகுதிகளில் ஆண்டு முழுவதும் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 

தற்போது கோடைகால சாகுபடி செய்யப்பட்ட நெல்கள் அனைத்தும் நன்கு விளைந்து  அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வத்திராயிருப்பு மற்றும்  அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடைகால நெல் அறுவடையை விவசா யிகள்  மகிழ்ச்சியுடன் தொடங்கி உள்ளனர். 

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார  பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி  செய்யப்பட்டுள்ளது. 

சமீபத்தில் பெய்த தொடர்  மழையின் காரணமாக நீர் நிலைகளிலும், அணை பகுதிகளிலும், கண்மாய்களில்  போதுமான அளவு தண்ணீர் இருந்ததால் தொடர்ச்சியாக இந்தாண்டு கோடை கால விவசாய பணிகள் தடையின்றி நடைபெற்றது.  தற்போது அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்தனர்.

Similar News