உள்ளூர் செய்திகள்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் நகரில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்க கூட்டமைப்பு சார்பில் வட்டார தலைவர் ஸ்ரீதர்ராவ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாவட்ட செயலாளர் சிங்கராயர், மாவட்ட துணை தலைவர் ஸ்டீபன், வட்டார செயலாளர் முத்து மாரியப்பன், பொருளா ளர் நிர்மலா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்க ளான ஜெயராமன், அழகுமணி, வட்டார துணை செயலாளர்களான ஆம்ஸ்ட்ராங்க், முத்துக்கு மார், சரளா, வட்டார துணை தலைவர்கள் பெஞ்சமின், மரியதாஸ் மற்றும் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.