உள்ளூர் செய்திகள்
மானாமதுரை பிரித்தியங்கிராதேவி கோவிலில் பால்குடம் உற்சவ விழா நடந்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம். மானாமதுரை அருகே உள்ள மகாபஞ்சமுக பிரித்தியங்கிரா தேவிகோவில் உள்ளது. இக்கோவிலில் அமாவாசை தோறும் நடை பெறும் சண்டியாகத்தில் தமிழகம் மழுவதும் ஏராளமான பக்தர்கள்க லந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
இங்குள்ள குண்டு முத்துமாரியம்மன் தனிசன்னதியில் சித்திரை பால்குடம் விழா நடைபெற்றது.
இதையொட்டி அருகில் உள்ள தர்மமுனீஸ்வரர் கோவிலில் இருந்து ஞான சேகரசுவாமி தலைமையில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து கோவிலை வலம்வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் அன்னதானமும் நடைபெற்றது.