உள்ளூர் செய்திகள்
நகைகள் கொள்ளை.

வீடு புகுந்து நகைகள் கொள்ளை

Published On 2022-05-10 15:00 IST   |   Update On 2022-05-10 15:00:00 IST
சிவகாசியில் வீடு புகுந்து 91 பவுன் நகைகள் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர்

சிவகாசி அனுப்பக்குளம் பகுதியில் வசிப்பவர் செண்பகமூர்த்தி (வயது52). இவர் பட்டாசு ஆலைகளுக்கு டியூப் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் உள்ள இரும்பு பெட்டியில் 91 பவுன் நகைகளை வைத்திருந்தார். 

இந்தநிலையில் செண்பகமூர்த்தி மனைவியின் செயின் அறுந்துவிட்டது. அதனை சரிசெய்வதற்காக இரும்பு பெட்டியில் உள்ள நகையை எடுக்க பெட்டியை திறந்தனர்.அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த 90பவுன் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். 

அதனை மர்மநபர்கள் எடுத்து சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் நகை இருந்த இரும்புபெட்டி உடைக்கப்படாமல் இருந்த தால் அதிலிருந்த நகைகள் மாயமானது எப்படி?என்று கேள்வி எழுந்துள்ளது.

 இதுபற்றிய புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தசம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News