உள்ளூர் செய்திகள்
சிறப்பு மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அருகில் மதுசூதன்ரெட்டி, து

கொரோனா இல்லாத தமிழகமாக உருவெடுத்து வருகிறது

Published On 2022-05-09 11:24 GMT   |   Update On 2022-05-09 11:24 GMT
கொரோனா இல்லாத தமிழகமாக உருவெடுத்து வருவதாக அமைச்சர் பேசினார்.
சிவகங்கை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சி, அண்ணா சிலை - பஸ்  நிலையம் அருகில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில்  அமைச்சர் பெரியகருப்பன்  தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. கடந்த ஓராண்டில் கடைக்கோடிப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும். பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி, தமிழகம் முழுவதும் வளர்ச்சிப்பணிகளையும் துரிதமாக மேற்கொண்டு ள்ளார்.  அவர்  ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், 5 முத்தான் திட்டங்களுக்கு கையெழுத்திட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

நேற்றையதினம் சிறுவ ர்கள், மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில், ஊட்டச்சத்துக்களை வழங்கிடும் பொருட்டு காலை உணவுகளையும்  சேர்த்து வழங்கிடுவது போன்ற புதிய 5 திட்டங்களுக்கு கையெழுத்து இட்டுள்ளார். இதுபோன்ற தமிழகத்தில் அனைத்துத்துறைகளையும் மேம்படுத்துவதற்கென அனைத்து நடவடிக்கை களையும் சிறப்பாக மேற்கொண்டுள்ளார். 

குறிப்பாக சுகாதாரத்து றையில் மத்திய அரசும் பாராட்டுகின்ற வகையில், செயல்பட்டு இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழும் வகையில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  முதலமைச்சர் மேற்கொண்ட கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கொரோனா அல்லாத தமிழகமாக உருவெடுத்து வருகிறது. கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்கு தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதை கருத்தில் கொண்டு, பொதுமக்களை பேணிக்கா த்திடும் பொருட்டு, தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடை பெற்று வருகிறது. 
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 16.1.2021 முதல் 4.5.2022 வரை மொத்தம் 20,30,517 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசிகள் 10,88,824 நபர்களுக்கும் செலுத்தப்ப ட்டுள்ளது. 

இவ்வாறு அவர் பேசினார். 

முகாமில் துணை இயக்குநர் (சுகாதாரம்)   ராம்கணேஷ், திருப்பத்தூர் ஒன்றிய தலைவர்  சண்முகவடிவேல், பேரூராட்சித் தலைவர் கோகிலா நாராயணன், துணைத்தலைவர் கான்முகம்மது, வட்டார வளர்ச்சி அலுவலர்  செந்தில்குமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News