உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் அருகே அனுமதி இன்றி தயாரிக்கப்பட்ட 500 ஓலை பட்டாசுகள் பறிமுதல்
நாகர்கோவில் அருகே அனுமதி இன்றி தயாரிக்கப்பட்ட 500 ஓலை பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகர்கோவில்:
ராஜாக்கமங்கலம் அருகே மேலமாவிளை என்ற இடத்தில் ராஜாக்கமங்கலம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பாழடைந்த படிப்பகம் ஒன்றின் மேல் பகுதியில் ஒரு பார்சல் கிடந்தது. அந்த பார்சலை போலீசார் கைப்பற்றி சோதனை செய்தனர்.
அப்போது அதில் 500 ஓலைப்பட்டாசுகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில் அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக தயாரிக்கப்பட்டு அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த ஓலை பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்த னர். அந்த ஓலை பட்டாசுகளை தயாரித்த வர்கள் யார் என்பது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜாக்கமங்கலம் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு இடத்தில் நடந்த பட்டாசு விபத்தில் 10-க் கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து 4 பேர் காயமடைந்த சம்பவமும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.