உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

அரக்கோணம் அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் சாவு

Published On 2022-05-09 15:12 IST   |   Update On 2022-05-09 15:12:00 IST
அரக்கோணம் அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் மரணம் குறித்து போலீசார்– விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த நகரி குப்பத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி  (வயது54). என்பவர் போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். 

இவர் சம்பவத்தன்று இரவு சாப்பாடு சாப்பிட்ட பின் தூங்கினார். அப்போது திடிரென அதிகாலையில் நெஞ்சு வலிபதாக உடன் இருந்தவர்களிடம் கூறியுள்ளார். 

உடனே அவரை மீட்டு பூந்தமல்லி அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தக்கோலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News